Translate

Saturday 31 December 2016

Dr Loga's New Year Message on the 1-1-2015

அன்பர்களே
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது மின் குழுமங்கள் 15 ஆண்டுகட்கு மேல் நலமே இயங்கி வருகின்றது. நல்ல பல கட்டுரைகள் எழுதி ஆழமான் சிந்தனையை வளர்க்கும் முனைவர் வீரபாண்டியன் டாக்டர் கணேஷலிங்க்ம முனைவர் சிவகுமார் திரு அறிவழகன் பல ஆண்டுகாளாக விடாது நல்ல கருத்துக்களை தெரிவிப்பதோடு சுமேருத் தமிழ் ஆய்விலும் ஈடுபட்டு வரும் திரு புஷோத்துமன் பிள்ளை அவர்கள் போன்ற அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்ரேன்
எனக்கு 2014 ஆண்டு சாதாரண ஆண்டு அல்ல. இந்த ஆண்டின் இறுதியிலே சுமேருத் தமிழே முதற் சங்கத் தமிழ் என்ற கருத்தும் வடமொழி தமிழின் த்ரிபே என்ற கருத்தும் காட்டுத் தீ போல உலகெல்லாம் பரவிய ஆண்டு. மேலும் இந்த ஆண்டியியே ஓர் வரலாற்று சிறப்புமிக்க திருப்பமாக சுமேருத் தமிழ் தொடர்பாக மலேசிய நண்பன் எனும் மலேசுயாவின் தினசரி ஒன்றில் பல கட்டுரைகள் வந்து நல்ல வரவேறபை பெற்றதும் ஆகும். ஐரோப்பியர் வரலாற்று ஆசிரியர்களால் அவர்களை பின்பற்றிச் சென்ற இன்னும் பலரால் புறக்கணிக்கப்ப்ட்ட தமிழ் மொழியும் தமிழ வரலாறும் ஓர் புதிய எழுச்சி பெறுவதை என்னால் இப்பொழுது காணமுடிகின்றது,
மலேசியாவில் பலரிடையே தோன்றியுள்ள இந்த எழுச்சி இன்னும் பரவும் சூழ்நிலையும் உருவாகி வருவதைக் காண மீண்டும் ஓர் மாபெரும் எழுச்சி தோன்றிவிட்டதைக் காண முடிகின்றது.
இதனோடு ஓர் மாபெரும் சைவ எழுச்சியும் வந்துகொண்டிருப்பதையும் காண முடிகின்றது. வேதாந்தத் தாக்கத்தால் சைவம் புதையுண்டு கிடக்கும் பொல்லாத நிலையிலிருந்து அதனை மீட்டு அதன் நூலிய அறிவியல் அடிப்படைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் நல்லவோர் வெற்ரி அடைந்து வருவதை என்னால் உணர முடிகின்றது.
விரைவில் உலகளாவிட்ய நிலையில் ஓர் மாபெரும் சைவ சமய எழுச்சியும் தோன்றும் என்றே நினைக்கின்றேன்.
இன்று பிறபகல் இது தொடர்பாக சில அன்பர்களோடு கலந்துரையாடி சில செயல்திட்டங்களை வகுக்கவும் உள்ளேன்
இப்படிப்பட்ட மாபெரும் திருப்பத்திற்கு விதிட்ட திரு அறிவழகன் அவர்கட்கும் முனைவர் சிவகுமார் அவர்கட்கும் அவரைச் சார்ந்த் ஏனைய அன்பர்கட்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்
மனதிலே ஓர் அளப்பரிய நிம்மதி. ஓர் மாப்ரும் வரலாற்று திருப்பம் தமிழர்களிடையே தொடங்கிவிட்டது, மீண்டும் அவர்கள் வீறுகொண்டு எழுவார்கள் உயர்வார்கள் அவர்களோடு தமிழும் வளரும் எல்லா சமயங்களையும் ஆதரிக்கும் சைவமும் வளர்ந்தோங்கும் என்ற நம்பிக்கையில் நான் இப்போது.
மேலும் இவற்றிற்கெல்லாம் உதவிய மின்.தமிழ் வல்லமை மின்குழுமக்கட்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்
உலகன்
1-1-2015

No comments:

Post a Comment